Wednesday, 26 February 2025

நீ நான்

நீ கவிதை  

நான்  கவிஞன் 

உன் வரிகளில் நான் வாழ்வேன்!


நீ கற்பனை  

நான் காதலன் 

நம் காதலை வரைந்திடுவேன்.


நீ பேனா  

நான் காகிதம்  

உன் பெயரை தினமும் எழுதிடுவேன்.


நீ சிந்தை 

நான் செயல் 

உன் எண்ணம் போல் நானிருப்பேன்.


நீ கவிதை  

நான் கவிஞன் 

உன் வரிகளில் நான் வாழ்வேன்!





நீ கண்ணீர்  

நான் கைகுட்டை 

நீ விழும் போது தாங்கிடுவேன்.


நீ   சிற்பி

நான்  சிற்பம்

உன் வலிகள் முழுவதும் நான் ஏந்துவேன்....


நீ பனிக்காற்று

நான் செவிப்பறை

காதோரம் நீ வீசிட காத்திருப்பேன் ....


நீ பாதம்

நான் பாதை

நீ செல்லும் வழியிலே உருவாகுவேன் ......


நீ நீர் துளி

நான் தாகம்

தாகத்தை தணிக்கும் வரை தவித்திருப்பேன்



நீ மனைவி  

நான் கணவன் 

காலம் வரை உடன் இருப்பேன்......


நீ தேவதை

நான் யாசகன்

யாசித்தே வாழ்ந்திடுவேன் ....




நீ தேவதை

நான் யாசகன்

யாசித்தே வாழ்ந்திடுவேன் ....



- முத்து துரை

Tuesday, 25 February 2025

பேருந்து காதல்



பட்டாம்பூச்சிக் கூட்டம்  

படபடவென என்னுள்


ஏதோ செய்கிறதே

என்னுள் ஏதோ செய்கிறதே!


கூட்ட நெரிசலில் 

கூடுவிட்டு கூடு பாய்ந்து 

கூராாய் நுழைந்தது 

உன் முகமே!


இருக்கைகள் இருந்தும் - நீ

இருக்கும் இடம் தேடி

கால்கள் நகர்கிறதே! என்

கால்கள் நகர்கிறதே!


பாலுக்கும், துகளுக்கும்

தேனீர் குவளையில்

மலர்ந்திடும் காதல் போல்

மணம் வீசுகிறதே!



பட்டாம்பூச்சிக் கூட்டம்  

படபடவென என்னுள்

ஏதோ செய்கிறதே

என்னுள் ஏதோ செய்கிறதே!



ஜன்னலோர இருக்கைக்கு 

அலைமோதும் கண்கள்

இன்று 

உன்னை நோக்கி அலை மோதுகிறதே!



அவன் யார் என்று தெரியவில்லை 

பேர் என்ன   ம்ஹூம்ம்..... 

மனம் மட்டும் அவன் பின்னே 

என் மனம் மட்டும் அவன் பின்னே


தினம் தினமும் பயணித்தேன் 

இன்றாவது உன் கண்கள் 

இன்னிசைக்காதா? 


என்னை நோக்கி நீயும்

உன்னை நோக்கி நானும்


ஆ ஹா ஆ ஹா ஆ  ஹா.... 


படிக்கட்டில் பயணம்

படபடக்குது என் மனம்

படைப்பாளனே உள் வருவாயோ

ஏங்குது பெண் மனம் ....




நீ காண வேண்டும் என்று

நாளொரு வண்ணம் நானும்

நாளிதழ் ஏந்துகின்றேனே....



உன் புத்தகங்கள் தரும் வேளை

என் சத்தங்கள் கேட்கிறது

உன் பெயர் என்ன தெரிந்துகொள்ள

என் சத்தங்கள் கேட்கிறது ......



பட்டாம்பூச்சிக் கூட்டம்  

படபடவென என்னுள்

ஏதோ செய்கிறதே


-முத்து துரை



Sunday, 23 February 2025

தாவணிக் கனவுகள்

கண்ணுக்குழி அழகே

கூறு போடும் திமிரே

மச்சங்களில் கோர்த்த

மாமனின் மகளே!


ஆயிரம் கனவுகள்

நானும் கண்டேன் உன்னுடனே

அதைப் பேசிட வேண்டும் 

நாட்கள் முழுவதுமே


வயல்களின் நடுவே ஓடிடும் வரப்பே

மயில்களின் அழகை காட்டுது உன் முகமே

 நெருஞ்சிலின் முள் போல் 

குத்துது உன் நினைவே

ஓடைகள் தேடும் ஓரிரு துளியே!


கரிசக்காட்டு மணமே

காட்டுது உந்தன் நிறமே

தென்னங் கீற்றின் நடுவே

கீச்சிடும் குயிலே!

பதநீரின் போதை

தரும் உந்தன் உதடே!


தட்டாம்பூச்சி பிடிக்க 

தாவிடும் கையே

தாவணிப் பொண்ணே

தங்கமே என் கண்ணே!


முறுக்கு மீசை வச்ச மாமா முறுக்காதே

மொத்த அழகில் என்னை நீயும் மயக்காதே!

உழவு காட்டில்

உசுர நீயும் வாங்காதே

உதவிக்கு வந்தா 

உரசி உரசி போகாதே!


ரொம்ப தான் அழுத்துகிற நீ தான்

ரொம்ப தான் சிலுத்துகிற நீ தான்

ஆசையா கொஞ்ச வந்தா

ஆயுதம் ஏந்துகிற நீயும் 

தொட்டாச்சிணுங்கி கண்ணத்தான்

தொடாம போவேணோ நானும் தான்


தாலி தான் கட்டிய பின்பு தான்

தாரம் தான் ஆன பின்னும் தான்

தாடிக்குள் தாவணி கனவுகள் துடிக்கிறதோ?



கண்ணுக்குழி அழகே

கூறு போடும் திமிரே

மச்சங்களில் கோர்த்த

மாமனின் மகளே!


தொட்டாச்சிணுங்கி கண்ணத்தான்

தொடாம போவேணோ நானும் தான் ......


- முத்து துரை


Friday, 21 February 2025

தலைவனை தேடும் தலைவி


கள்வனே! கள்வனே!

உன்னை தேடுது பெண்மையே!

மாற்றினாய் மாற்றினாய்

என்னையும் உன்னை போல்

தூரதேசம் சென்றதால்

தூது விட்டேன் என்னையும் ....

துடிக்குது பெண்மையே

துள்ளி நீ வருவாயே!



தொலைதூர பயணம் சென்றேன்

தொடுவானம் நீதான் என்றேன்

நெடுஞ்சாலை தனிமை எல்லாம்

நினைவோடு நானும் சென்றேன்!

மேகங்களின் மேலே சென்றாலும்

தேடுது உந்தன் முகமே!




கொடிகள் படர தேடும் 

செடி போல் 

உன்னை  தேடுது  பெண்மையே!

தொலைபேசி மணியோசை

அதில் கேட்கும் உன் ஓசை

நேரிலே எப்பொழுது

தினம் கேட்கும் என் ஓசை.

கள்வனே! கள்வனே!



ஓ!

கடற்கரைச் சாலை எல்லாம்

கலவரம் கொண்டது

நீ இன்றி வந்ததால்

கலவரம் கொண்டது

கருவிழியே உன்னையுமே

கடத்திட துடிக்குது என் மனமே!



கடிதம் வரைய நினைத்து 

கவிதைகள் பல கோர்த்து 

எந்தன் துணையே! 

உந்தன் நினைவில்

உருகுகிறேன் நானுமே!



பாதகை உந்தன் பாதகை

தினம் வருடும் கைகளே!

நீ அனுப்பிய குறுஞ்செய்தியை

மனனம் செய்யும் பெண்மையே! 

வார்தைகள் முழுவதிலும்

வாழ்கிறேன் உன்னுடனே.....

தூரதேசம் சென்றதால்

தூது விட்டேன் என்னையுமே ....


திங்கள் தேடும் தேசம் இது

தென்றல் தேடுது என் மனது

பரிச்சயம் இல்லை முகங்களுமே

பதிவை தேடுது என் மனமே

உந்தன் 

பதிவை தேடுது என் மனமே!



தொலைபேசி மணியோசை

அதில் கேட்கும் உன் ஓசை

நேரிலே எப்பொழுது

தினம் கேட்கும் என் ஓசை.



வருவாயோ! சீக்கிரம் 

வருவாயோ! 

நித்தம் நித்தம் 

கரைகிறது பெண் மனமே!


- முத்து துரை

Wednesday, 19 February 2025

காதலியே!

காதலியே காதலியே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 


காதலி.         யே.          காதலி.          யே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 




காகித படகில் காதலியே!

கைகோர்த்து வந்த

காதலியே!


கண்ணோடு நாம்

கண்ணோடு நாம்

பேசிடும் வார்த்தைகள்

காலங்கள் எல்லாம்

காதலியே!


உன்னோடு நான்

உன்னோடு நான்

வாழ்ந்திடும் வாழ்க்கை

காதலியே!


காலங்கள் எல்லாம்

காதலியே!




கனவுகள் தான்

கனவுகள் தான்

அழகாய் உன்னோடு

காதலியே!


அகிம்சையாய் உள் நுழைந்த 

காதலியே!


பூவோடு நான்

பூவோடு நான்

உன் கூந்தல் சூடிட

காதலியே!


எனக்கென்று தான்

எனக்கென்று தான் 

அனைத்தையும் செய்த

காதலியே!


உனக்கென்று நான் 

உனக்கென்று நான்

தருவேன் உயிரை  

காதலியே!




காதலியே காதலியே

காலங்கள் எல்லாம் 

காதலியே! 


- முத்து துரை

Monday, 17 February 2025

கவி கவியாய்

கவி கவியாய்! 

கவியாய்!

உந்தன் புகழை பாட வா!


வேலா! 

உந்தன் புகழை பாடவா !


செவி செவியாய் 

செவியாய் 

எந்தன் 

செவி வழியாய் கேட்ட 

புகழை பாடவா!



கவி கவியாய்!

கவியாய்

புகழைப் பாடவா !


மயிலுடன் நீ வரும் 

அழகை பாடவா!


மயில்வாகனனே உந்தன்

அழகை பாடவா!


தமிழுக்கு நீ தந்த 

தகவல் பாடவா!


அகரங்களை முதலாக

அடுக்கி பாடவா!

அடுக்கி பாடவா!


உந்தன் புகழை பாடவா!

நீ அருளிய கொடையை பாடவா!


கவி கவியாய்

கவியாய்

நான் பாடவா !


அவ்வையிடம் வினவிய

வினாவை பாடவா!


குழந்தையில் நீ செய்த 

குறும்பை பாடவா!


குமரனாய் நீ செய்த

காதல் பாடவா !


என்ன நான் பாட 

என் முருகா 

உன்னை பற்றி என்ன நான் பாட

உன்னை பற்றி பாட

அருளைத் தருவாய் எனக்கு

அரோகரா! அரோகரா!


- முத்து துரை

Saturday, 15 February 2025

கணவன் - மனைவி

சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


மழையாய் பெரும் மழையாய்

மாறிவிட்டாய்!


பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

நானும் தொலைந்தேனே 

உன்னுள் நானும் தொலைந்தேனோ!


மொழிகள் முழுவதும் நீயானாய்!


வலைத்தள தேடல்  முழுவதும் நீயானாய்!


வார்த்தையாய் 

என் நெஞ்சில் நீ நுழைந்தாய்!


வரிகளாய் 

காதல் வரிகளாய் 

என்னுள்ளே நீ மிதந்தாய்!


இசையாய் 

மெல்லிசையாய் 

என்னையும் நனைய வைத்தாய்!


உன் பெயரும், என் பெயரும் சேர்ந்திடவே

உன் கையும், என் கையும் கோர்த்திடவே

உன் உறவும், என் உறவும் சேர்ந்திடவே

நாளும் நெருங்கியதே!

இனிய நாளும் நெருங்கியதே!



சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


நாணம் வழிகிறதே! 

என்னுள் நாணம் வழிகிறதே!


நாளும் வருகிறதே!

உன்னுடன் பயணிக்கும் 

நாளும் வருகிறதே!


கைகோர்த்து கதைக்க 

பல கதைகள் இருந்தும்

கதைக்காமல் செல்கின்றோம் நாம்தான்!

கதைக்காமல் செல்கின்றோம் நாம் தான்!


நாளும் வருகிறதே

உன்னுடன் சேரும் 

நாளும் வருகிறதே!


கானல் மழையில் நனைகின்றேன்

கனவுகளுடன் 

கானல் மழையில் நனைகின்றேன்!


சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


மழையாய் பெரும் மழையாய்

மாறிவிட்டாய்!


- முத்து துரை








Thursday, 13 February 2025

ஒரு கவிதை!

ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!


கண்கள் பேசிடும் காதலை
கண் ணிமை மூடாமல்
ரசிக்குதே!

ஓ!

இது காதல் தானோ!

ஓ!

இது போதை தானோ!


வானிலை மாற்றம் நிகழுதே!

புயலும் இங்கே தென்றலாய் வருடுதே!

பேரிறைச்சலும் இன்னிசையாய் கேட்குதே!



காதலின் தினம் இன்று 
காதலால் நிரம்புதே!

கானங்களின் இசைகளும்
காதலை இன்று சொல்லுதே!



ஹே !

பூந்தோட்ட கிளி தானே!

ஹே!

புது வெள்ளை மழை தானே!




உன்னைப் பார்த்ததும்
நகரவில்லை - என் 
நாட்களும்!

ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!


கண்கள் பேசிடும் காதலை
கண் ணிமை மூடாமல்
ரசிக்குதே!


பறந்திட பறந்திட 
மனம் இன்று துடிக்குதே!

அவனைக் கண்டதும் 
காரணம் இன்றி கரையுதே!



மெல்லிசை தென்றலும் நீ தானே!
மேல் அங்கமும் நீ தானே!


வெண்ணை திருடிய 

கண்ணன் போல்

உன்னை திருடிட 

மனம் இங்கு துடிக்குதே!


ஓ!

புது வெள்ளை மழையா!

ஓ!

பனிகளின் சிலையா!



ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!



லால லல லால லலலா

- முத்து துரை







Wednesday, 12 February 2025

என் காதலே !

என்னோடு வா! என் காதலே! 

என் காதலே!


ஊசியில் நுழையும் நூல் போல் 

உன் நினைவுகள் 

என் மனதில் துளைத்துத் துளைத்து 

துளையிடுகிறதே!


சிரிப்பை மறந்த என் இதழ்கள் 

மவுனத்தை மட்டும் உதிர்கிறதே!


பேனா முனை கிழித்து 

காயம் பட்ட காகிததிற்கு மருத்தாக

கவிதைகள்  - உன் பெயரை

எழுதி எழுதி தேய்கிறதே.!


என்னோடு வா என் காதலே !

கைகோர்க்க துடிக்குது என் மனமே!


காயம் பட்ட என் இதயத்திற்கு

காதலை நீ தருவாயோ! !


அலைகளில் நீத்தும் நிலவின் 

முகம் போல் - என் நினைவிலே உன்

முகம் தானே நீந்துகிறதே!


என்னோடு வா! என் காதலே! 


என் மவுனத்தை களைக்க 

என்னோடு வா! என் காதலே! 



உன் கூந்தலை கோதிட

என்  நகக்கண்கள் துடிக்கிறதே!


ஆயிரம் ஜனனங்கள் நான் எடுப்பேன்

உன் கூந்தலில் மரணித்திட 

ஆயிரம் ஜனனங்கள் நான் எடுப்பேன்


என்னோடு வா! என் காதலே! 

என் பயணங்கள் முடிவதற்குள்

என்னோடு வா என் காதலே !


- முத்து துரை








Tuesday, 11 February 2025

உறவுகளும் தானே

துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் உறவுகள் தானே!


பணத்தின் மதிப்பு இல்லை என்றால் தெரியும்

குணத்தின் மதிப்பு பணத்தினால் புரியும்

பணமா? குணமா? அளவிடும் உறவும்!


குணம் மட்டும் இருந்தால்

குழப்பங்கள் இல்லை


குழப்பத்திற்கு என்றே வரும் 

இந்த உறவுகளும் தானே!

உறவுகளும் தானே!


அற்பனுக்கு இங்கே வாழ்வு வந்த போதும்

சொப்பனத்தில் இருந்தே வீழ்ந்து விடும் வாழ்வும்!


துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் உறவுகள் தானே!


பகலவன் போலே 

பகிர்ந்திடும் உறவும் 

கிடைத்துவிட்டால் நீயும்

கொடுத்து வைத்தவன் தானே

கொடுத்து வைத்தவன் தானே!


போதைக்கு உண்டு

பாதைக்கு இல்லை!


பகட்டு இல்லா உறவும்

கிடைத்துவிட்டால் நீயும்

வென்றிடுவாய் உலகை!

வென்றிடுவாய் உலகை!


அன்றிருந்து இன்றும்

மாறவில்லை உலகும்

மாறவில்லை உறவும்

மாற்றம் நோக்கி

நாமும் நகர வேண்டும் தானே!


துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் லாலலலாலா!


- முத்து துரை




Sunday, 9 February 2025

ஏன் பிரிந்தாய்

ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்

ஏன் என்னை வதைத்தாய்!


என் உயிர் வரை கலந்தாய்

என் உணர்விலும் உறைந்தாய்

ஏன் என்னை பிரிந்தாய்!


நிழல் எல்லாம் நீயாகி என்னுள் இருந்தாய்

நிஜமெல்லாம் நீயாகி என்னுள் வளர்ந்தாய்


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்!!!


நித்தம் நித்தம் உன் நினைப்பில் 

பித்தன் ஆனேனே!

சித்தம் எல்லாம் -என் 

சித்தம் எல்லாம் நீயும் ஆனாயே!


நீயும் ஆனாயே எல்லாம் 

நீயும் ஆனாயே! 


அலைகளில் முழ்க பார்த்தேன் 

அந்த அலைகள் கூட வெறுத்தது

தன்னில் இணைக்க மறுத்தது 


காதல் தோல்வியில் 

கண்ணீர் வடித்தேன் 

கண்கள் முழுதும் 

நீதான் நின்றாய்!


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்!!!


இதய கூட்டை 

இடித்து பாத்து 

இனிப்பை தந்தாயே!


மழையில் முளைத்த காளானாக 

நானும் ஆனேனே -உன்னிடம்

நானும் ஆனேனே!


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னுள் பிறந்தாய்


காதல் கோட்டையைத் தகர்த்து பாத்து

கனவில் வந்து 

புன்னகை புரிகின்றாய்.


நீயும் புன்னகை புரிகின்றாய்!


தனநனநனந தனநனநனந


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்

ஏன் என்னை வதைத்தாய் 


-முத்து துரை





Thursday, 6 February 2025

அறிமுகம்

அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே


அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


அறிமுகம் இல்லை அவளிடமே!


அவன் வசமானது என் மனமே!


தூரத் தேசத்து ஓவியமே 

தூரிகை வரைந்தேன் உன்னையுமே 


காதல் கடிதம் நான் எழுத 

கற்பனையில் மிதந்தேன் உன்னுடனே


வண்ணம் கொண்ட வானவில்லே 

வருவாயோ எந்தன் மேகத்திலே 

வலக்கை பிடித்து வலம் வந்து 

வாழ்க்கைத் துணையாய் ஆவாயோ!


கற்பனை நிறைந்த காதலனே!

காதலால் என்னை கொல்வாயோ

காதலால் என்னை கொல்வாயோ!


வண்ணம் கொண்ட வானவில்லே

வாழ்க்கைத் துணையாய் ஆவாயோ!


கற்பனை நிறைந்த காதலனே!

காதலால் என்னை கொல்வாயோ!


அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே


அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


வரிகளின் அலங்காரம் இசையாக என் முன்னே!

வார்த்தையின் அலங்காரம் கவியாக என் முன்னே!


பாடலின் முதல் வரியும் 

பயணிக்கும் பல்லவியும் 

இடைத்துடிக்கும் நாதமும்

உருகிடும் வார்த்தையும் நீயே என்னம்மா!


காமத்தின் மறுபெயரும் 

காதலின் காவியமும் 

காட்டிடும் அரக்கனும் 

கண் பேசும் கவிஞனும் நீயே என்னவா!.


அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே

அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


தூரத் தேசத்து ஓவியமே 

தூரிகை வரைந்தேன் உன்னையுமே 


காதல் கடிதம் நான் எழுத 

கற்பனையில் மிதந்தேன் உன்னுடனே



- முத்து துரை 

Tuesday, 4 February 2025

திருநெல்வேலி

திருநெல்வேலி வந்து பாரு

திருப்பங்கள் உனக்கு உண்டு பாரு!


திருச்செந்தூர் முருகனடா

திருப்பங்கள் உனக்கு தருவானடா!


வேலியாய் நாங்கள் இருப்போமடா

வேங்கையே வந்தாலும் எதிர்ப்போமடா

திருநெல்வேலி சீமையடா

சீவலப்பேரி கோட்டையடா!


உப்பள காத்து வீசுதடா

உசுரா நாங்க இருப்போமடா!

திருநெல்வேலி சீமையடா

சீவலப்பேரி கோட்டையடா!


பாலைவனமும் கிடக்குதடா!

பசுநெல்லும் இங்கே விளையுதடா!

ஐந்து நிலமும் இருக்குதடா!

ஐயம் வேண்டாம் உனக்கடா!


மலைகளும் இங்கே மலருதடா

மரங்களும் இங்கே மகிழுதடா

வயல்களும் இங்கே வருடுதடா

கடல்களும் இங்கே கனியுதடா!

மணலும் இங்கே மணக்குதடா!



திருநெல்வேலி வந்து பாரு

திருப்பங்கள் உனக்கு உண்டு பாரு!


திருச்செந்தூர் முருகனடா

திருப்பங்கள் உனக்கு தருவானடா!


- முத்து துரை





பராசக்தி

வறுமைகள் போக்கியே!

வாழ வைப்பாயே! 

வாழ வைப்பாயே! 


சிறுமைகள் தளர்த்தியே! 

சிறப்புற செய்வாயே! செய்வாயே!


மரங்களும் வளர்ந்தது 

மலைகளும் செழித்தது 

மழைகளும் சிலிர்த்தது 

எல்லாம் உன்னாலே! உன்னாலே! 


ஞாலம் வளர்ந்தது

நாளும் உயர்ந்தது

ஞானம் பிறந்தது

நாயகி உந்தன் அன்பாலே! அன்பாலே!



என் தாயே! 

பராசக்தி நீயே!

ஆதி பராசக்தி நீயே!

காப்பாயே! எம்மை


கள்வம் நிறைந்தது

கர்வம் உயர்ந்தது

கடமை தளர்ந்தது

களையெடுக்க வருவாயோ!


தீமைகள் ஒழிந்திட

தீயதை களைந்திட

தீர்ப்புகள் தந்திட

அவதாரம் எடுப்பாயோ 

அவதாரம் எடுப்பாயோ !


எங்கள் தாயே!

பராசக்தி நீயே!

ஆதி பராசக்தி நீயே!

காப்பாயே! எம்மை


வறுமைகள் போக்கியே!

வாழ வைப்பாயே! 

வாழ வைப்பாயே! 


சிறுமைகள் தளர்த்தியே! 

சிறப்புற செய்வாயே! செய்வாயே!


- முத்து துரை











Saturday, 1 February 2025

நம்பிக்கை

ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே! 


ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே!

நம்பிக்கை என்ற ஒன்றாலே! 

ஒவ்வொரு மனதுமே மலர்கிறதே! 

லட்சியம் என்ற ஒன்றாலே! 


அவமானங்கள் பல சந்தித்தும் 

கண்ணீர்கள் பல சிந்தித்தும்

வாழ்வது இந்த வாழ்க்கையே 

தேடுது அந்த வெற்றியே!


கல் ஒன்று தடுக்கிறது என்றால்

உளிக் கொண்டு சிலையாக்கு!

சொல் ஒன்று வதைக்கிறது என்றால்

உயர வேண்டும் உள்வாங்கு!


வெற்றியும், தோல்வியும் உன்னிடமே

அதன் மேல் கொண்ட காதல் சொல்லிடுமே!

வெற்றியோ! தோல்வியோ! முயன்று விடு

முடிவுகள் அதனிடமே கொடுத்து விடு!


பூக்கள் பூத்து உதிர்கிறது

அதன் பயனும் முடிகிறது

சருகாக காய்ந்த பின்னும்

உரமாக மாறுகிறது .....


தேனீக்கள் தேனை தான்

சிறுக சிறுக சேர்கிறது

ஏமாற்றம் தெரிந்தும் தான்

திரும்பத் திரும்ப முயற்சிக்கிறது....


மனமே! மனமே கொஞ்சம் நில்லு

கலங்காதே எல்லாம் உந்தன் கையில்


எறும்புகள் சோர்வதில்லை

இயற்கையும் வீழ்வதில்லை

மனம் மட்டும் ஏன் துடிக்கிறது

மலையோடு போராட வெறுக்கிறது


போராட்டம், போராட்டம் மட்டுமே என்று கலங்காதே

போராட்டம் முடிந்திடுமே!

முடிவுகள் ஒரு நாள் வரும் தளராதே!

உன்னோட விடியலாக அது மாறிடுமே!


மனமே! மனமே கொஞ்சம் நில்லு

கலங்காதே! கலங்காதே! எல்லாம் உந்தன் கையில்


ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே!

நம்பிக்கை என்ற ஒன்றாலே! 

ஒவ்வொரு மனதுமே மலர்கிறதே! 

லட்சியம் என்ற ஒன்றாலே! 


- முத்து துரை






சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...