Sunday, 5 April 2020

மேகங்களுக்கு பின்னால் இருக்கும் வானமாய்
உன் நினைவுக்கு பின்னால் இருக்கும்
காதல்!.

கதிரவனை காதலிக்கும்
நிலவாய் நீ நின்றாய்
நிலவை காதலிக்கும்
விண்மீன் கூட்டமாய் நான் வந்தேன்!.

பிரிவுடன் நீ நின்றாய்
புரிதலுடன் நான் வந்தேன்!.

சூறைக்காற்றில் நீ நின்றாய்
வருடும் தென்றலாய்
நான் வந்தேன்!.

ஒற்றை மலருக்காய்
ஓரம் நின்றாய்
சோலையுடன்
நான் வந்தேன்!.

வெறுப்புடன் நீ நின்றாய்
புன்னகையுடன் நான் வந்தேன்!.

- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...