Sunday, 5 April 2020

கண்கள் இரண்டும் சேர்ந்து வாழ..
இமைகள் இரண்டும் மின்னல் என மின்னிட...
உன் பார்வையில் நான்
என் பார்வையில் நீ..
கருவிழி நான்கும்
நமது பிம்பத்தை மாற்றிட...
உருளும் வட்டமென
கண்கள் உன்னை வட்டமிட..

சிவந்த உதடில்
சிரிப்பு மழை
உதடு விரிவில்
உள்ளம் உருளும்
தேன் கிண்ண வாய்கள்
இணைந்து சத்தமிட
உதடுகள் பேசிடும் இனிய மொழி முத்தம்...

தென்றல் புயலென மாறிடும்
கருமேகம் வெண்மேகமாய்
மாறிடும்.
கடல் அலைகள்
மணல்மேடாய் மாறிடும்..
என் மனமும்
ரணமாகிடும்
அவன் கோபத்தினால்...

-துரை முத்து

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...