Sunday, 5 April 2020

நீ

உன்னை மறுக்கவும் முடியவில்லை
அவளை மறக்கவும் முடியவில்லை
தவிக்கிறேன் நான்...

இடையினில் வந்தவள்
இமைகளில் இருக்க
கரம் பிடித்தவள்
காதலில் நான் இருக்க
சின்ன தேவதை
சிரிப்புகளில் - இதயம்
சிதறிபோக

நிஜங்களில் திழைக்கவா
இல்லை
நிழல்களில்
தவிக்கவா...

ஏக்கத்துடன் தொடரவா
இல்லை
அமைதியுடன் பயணிக்கவா....

ஆர்ப்பரிக்கும் மனமா
இல்லை
ஆசை கொள்ளும் மனமா...
எதை நான் தொடர!.

அன்புடன் அவள் நிற்க
ஆசையுடன் இவளை தேடி நான்...
இடையினில் தவழும் மழலை சிரிப்பு...

என் காதலில் அவள்
உன் காதலில் நான்...

- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...