Sunday, 5 April 2020

தமிழ் மொழி இணைக்கும்
தாய்மொழி அவனும் நானும்..
காதல் சொல்ல காதல் இருந்தும்.
கண்கள் கெஞ்சிடும் காதலை..
வார்த்தை தோற்கும் நேரம்
கைகள் பிணையும் நேரம்
காதல் வெளிப்படும் நேரம்
எல்லாம் காதலை சொல்லும்..
அவன் மட்டும் சொல்ல மறுக்கும் ஒன்று
அதை ஆசையுடன் எதிர்பார்க்கும் என் செவிகள்...
அலைகள் மோதும் அழகை
ரசிக்கும் அவன் மனம்.
இந்த பெண்ணின் அலைகளை உணர்ந்தும்
ரசித்தும் உள்ளுக்குள் மகிழும்...
காதல் என்ற உறவு
நம்மில்
காமத்தை தாண்டி வளர்கிறது...

-முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...