Sunday, 5 April 2020

என் மகள்

என் மார்போடு
உன்னை அணைக்கையில்
என் மார் துவாரங்கள் எல்லாம் விரிகிறது...

மகளே உன்னை கொஞ்சிடும் போது
மடி எல்லாம் நிறைகிறது...

உன் கண்ண சிரிப்பில்
என் கணம் எல்லாம் மறைக்கிறது....

உன் அழு குரலில்
மனம் எல்லாம் பதைக்கிறது...

பசியில் நீ கைகள் சுவைக்கும் போது
நவரசமும் என்னுள் அடங்கி போகிறது...

ஓடி வரும் கால்கள்
தூக்கிட துடிக்கும் கைகள்
பார்த்திட தூண்டும் கண்கள்
திரும்ப திரும்ப கேக்கும்...

- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...