உன் இரு சுழலில்
உள்ளம் மகிழ்ந்தேன்
உவகை தேடி அலைந்தேன்
உன்னை வர்ணிக்க...
உன்னை காணும் ஆர்வம்
உன்னை தொட்டு தழுவிய நிமிடம்
என் பயணம் உன்னுடன்
என் இரு சக்கரமே!..
- முத்து துரை
உன் இரு சுழலில்
உள்ளம் மகிழ்ந்தேன்
உவகை தேடி அலைந்தேன்
உன்னை வர்ணிக்க...
உன்னை காணும் ஆர்வம்
உன்னை தொட்டு தழுவிய நிமிடம்
என் பயணம் உன்னுடன்
என் இரு சக்கரமே!..
- முத்து துரை
நிழலாடும் போது
நிஜம் தேடுகின்றேன்...
நிஜம் தேடும் போது
நிழல் எங்கு என்றேன்...
நிஜமே நிழலாகும் போது
நான் எதை தேடுவேன்?
நிழல் என்றும்
நிஜம் என்றும்
நிஜம் கலந்த நிழல் என்றும்
நிழல் கலந்த நிஜம் என்றும்
பாகுபாடு தெரியவில்லை...
பாகுபாடு தெரிந்தும் கூட
நிழல் எங்கே தேடுது
நிஜம் தோற்ற போது
நிழல் காரணம் என்றால்
எதை கொண்டு வீழ்ந்தேன்
நிஜம் புரியவில்லை...
நிஜம் காட்டும் முகங்கள்
நிழல் போல ஆக
நிஜம் எங்கு தேடுவாய்
மனம் நீயே சொல்லு!...
மனம் நீயே சொல்லு!...
- முத்து துரை
கத கதையா
கத கதையா
காரணமாம்...
காரணத்த நான் சொல்லவா!
பிடிக்கலனு சொல்றதுக்கு
பல காரணம்...
பிடிக்கிதுனு சொல்றதுக்கு
ஒரு காரணமாம்....
கத கதையா
காரணங்கள் அடுகுத்தமா
காரியங்களோடு...
காரியங்களை அறியாமல்
காரணங்களை நம்புதம்மா...
யார் மீதும் யார் மீதும்
நம்பிக்கை இல்லையம்மா...
வேண்டாம் வேண்டாம்
இந்த உறவுகளம்மா
- முத்து துரை
தோழனே தோழனே!!
ஆருயிர் தோழனே!
அன்பின் உருவமே
அருமை குருவே!
ஆச்சரியங்கள் தருபவனே
அதிசயம் நிறைந்தவனே
அப்பா என்றேன்
அதட்டினாய்...
அண்ணன் என்றேன்
அடைகாத்தாய்...
தோழன் என்றேன் - என்
தோல்விகளை நீ ஏந்தினாய்...
காதலன் என்றேன்
கவிதைகள் தந்தாய்...
கணவன் என்றேன்
கரம் பிடித்தாய்
எல்லாமும் நான் என்றே!!
உன்னுள் நான் வர
என்னுள் நீ வர
என்ன தவம் செய்தேனோ!
என் ஆசை அழகா!
- முத்து துரை
உன்னை நான் அழைக்கவில்லை
உன்னை நான் நெருங்கவுமில்லை
ஏன் என்னுள் வந்தாய்...
ஒவ்வொரு உறுப்புக்கும்
ஒவ்வொரு உறுப்பினர்களாம்
சிறந்த ஆலோசர்கர்களாம்...
யாரிடம் இருந்து வந்தாயோ?
யாரிடம் போவாயோ?
யாருக்கும் தெரியாது...
கை சுத்தம் முழு உடல் சுத்தம்
எல்லாம் சுத்தம் இருந்தும்
எங்கிருந்து வருகிறாய்?
- முத்து துரை
கத்தியும் நீயே!
கைகுட்டையும் நீயே!
கண்ணீரும் நீயே - ஆனந்த
கண்ணீரும் நீயே!!
வார்த்தையே உன்னை
வதைக்க ஆள் இல்லை...
- முத்து துரை
உயிர் என நானிருந்தேன்
உறவென நான் நிமிர்ந்தேன்
உள்ளம் எல்லாம் திமிரினேன்
உவகை எல்லாம் தேடினேன்
உருளும் ஒரு வார்த்தை - உன்
உதடில் உதிராதா ?
உறைந்து நின்றேன்!
உதிரம் பிளந்து
உன் உருவம் வரைந்தேன்...
உருகும் உன் மனம் என்றேன்
உருகுலைந்தேன் நான்
உதிர்ந்த சருகாய் நின்றேன் - என்
உசுரையாவது தந்துவிடு இப்படிக்கு
உன்னுள் கரைந்த என் உயிர்...
- முத்து துரை
வேண்டாம் வேண்டாம் என்றாய்
நான் விலகி விலகி சென்றேன்!
நாளை என்றாய்
இன்று ஒரு நாள் மட்டும் என்றேன்!
போகாதே போகாதே என்றாய்
போகவில்லை
பொய் சொல்லி நான் வந்தேன்!
நீ பள்ளி சென்றாய் கண்ணீருடன்
கண்கள் முழுதும் உன் முகத்துடன்
நான் நின்றேன் நீ வீடு வரும் வரை!
- முத்து துரை
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...