Thursday, 14 September 2023

கணவன்! மனைவி!

தோழனே தோழனே!!

ஆருயிர் தோழனே!

அன்பின் உருவமே

அருமை குருவே!

ஆச்சரியங்கள் தருபவனே

அதிசயம் நிறைந்தவனே

அப்பா என்றேன் 

அதட்டினாய்...

அண்ணன் என்றேன் 

அடைகாத்தாய்...

தோழன் என்றேன் - என்

தோல்விகளை நீ ஏந்தினாய்...

காதலன் என்றேன் 

கவிதைகள் தந்தாய்...

கணவன் என்றேன் 

கரம் பிடித்தாய் 

எல்லாமும் நான் என்றே!!

உன்னுள் நான் வர 

என்னுள் நீ வர

என்ன தவம் செய்தேனோ! 

என் ஆசை அழகா!


- முத்து துரை 


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...