தோழனே தோழனே!!
ஆருயிர் தோழனே!
அன்பின் உருவமே
அருமை குருவே!
ஆச்சரியங்கள் தருபவனே
அதிசயம் நிறைந்தவனே
அப்பா என்றேன்
அதட்டினாய்...
அண்ணன் என்றேன்
அடைகாத்தாய்...
தோழன் என்றேன் - என்
தோல்விகளை நீ ஏந்தினாய்...
காதலன் என்றேன்
கவிதைகள் தந்தாய்...
கணவன் என்றேன்
கரம் பிடித்தாய்
எல்லாமும் நான் என்றே!!
உன்னுள் நான் வர
என்னுள் நீ வர
என்ன தவம் செய்தேனோ!
என் ஆசை அழகா!
- முத்து துரை
No comments:
Post a Comment