உன் வருகைக்காக
என் விழிகள்
செல்லகுட்டி என்று
அள்ளிகொள்ளும் கைகள்!
எங்கே நீ என்று கேட்டுகொண்டே
என் நாட்கள் விரிய...
உன் அன்பு
எனக்கு மட்டும்
சண்டையிடும் நான்!
உன் காதலியும் நானே!
உன் தோழியும் நானே!
உன் எதிரியும் நானே!
உன் நட்பும் நானே!
உன் தொல்லையும் நானே!
எல்லாம் நானே
உன் தோலின் வலிமை அறிந்தேன்
உன் கண்களின் ஆழம் அறிந்தேன்
உன் நேர்மையின் வீரம் அறிந்தேன்
உன்னை அருகில் இருந்து அறிந்தேன்
உன்னை தேடும் மகள்
எப்போ வருவாய்
என் இனிய அப்பா!
- முத்து துரை
No comments:
Post a Comment