Wednesday, 27 September 2023

மகளுடன் என் பயணம்...

நீ தூங்கும் அழகை 
ரசித்த விழிகள்
எப்போ தூங்குவாய் ஏங்குகிறது...

ஐய்யோ!
காதல் தோல்வியே மேல்
உன்னை தூங்க வைப்பதை விட
எண்ணுகிறது என் எண்ணம்...

  
ஏதெதோ கதைகள் பேசி பேசி ஓய்கிறது
உன்னை கொஞ்சி கொஞ்சி 
களித்த இதழ்கள் தூங்கடி என்று ...

நேரம் செல்கிறது
அய்யோ! 
இரவின் கொடுமை விரிகிறது
உனக்கு தூக்கம் மட்டும் வரவில்லையே...

எப்போது பிஞ்சி கைகள் மலரும்
எப்போது உன் கால்கள் நடைபோடும்
எப்போது உன் கண்கள் துயில் கொள்ளும் 
எப்போது எப்போது என்று புலம்பும் மனம்...

தாய்மை தூய்மைதான் 
நான் தாலாட்டு பாடியதும் 
நீ தூங்கியதும்...
கதை சொல்லியதும் 
தூங்கினாள் பிறர் சொல்ல
நமக்கு மட்டும் தான் இப்படியா
இன்னும் கதச் சொல்லுங்க 
இன்னும் கதச் சொல்லுங்க 
இனிய குரல் மட்டும்...

எல்லா நேரமும் அவளின் பாடல்கள் தான் 
நினைவில் வருவதெல்லாம் 
உருளைக்கிழங்கு செல்லகுட்டி
என்று வளர்வாளோ
என் செல்ல மகள்...

- முத்து துரை 





No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...