Sunday, 15 October 2023

நிஜமா! நிழலா!


நிழலாடும் போது

நிஜம் தேடுகின்றேன்...

நிஜம் தேடும் போது

நிழல் எங்கு என்றேன்...

நிஜமே நிழலாகும் போது

நான் எதை தேடுவேன்?


நிழல் என்றும் 

நிஜம் என்றும் 

நிஜம் கலந்த நிழல் என்றும்

நிழல் கலந்த நிஜம் என்றும் 

பாகுபாடு தெரியவில்லை...


பாகுபாடு தெரிந்தும் கூட 

நிழல் எங்கே தேடுது 

நிஜம் தோற்ற போது

நிழல் காரணம் என்றால்

எதை கொண்டு வீழ்ந்தேன்

நிஜம் புரியவில்லை...

நிஜம் காட்டும் முகங்கள் 

நிழல் போல ஆக

நிஜம் எங்கு தேடுவாய்

மனம் நீயே சொல்லு!...

மனம் நீயே சொல்லு!...


- முத்து துரை 




No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...