Saturday, 28 October 2023

போர் போர்

ஏன் இந்த நிலை ?
பார்ப்பதற்கே பதைக்கிறதே
ஐயோ இறைவா !
எப்படி தாங்குகிறது 
எண்ணற்ற இதயங்கள் 
வானில் இருந்து விழுவது 
வானம் தரும் கொடையா!
இல்லை 
மனிதம் தரும் வலியா!
என்னவென்று தெரியாமல் விடியல்கள் 
எத்துணை எத்துணை 
பச்சிளம் இதயங்கள் 
உங்கள் பகைக்கு 
பிஞ்சிகள் என்ன செய்ததோ!
போர் போர் என்று 
போகும் மனமே !
உங்கள் போதைக்கு 
பலிகள் ஏனோ 
பாவப்பட்ட மனிதங்களே!

-முத்து துரை 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...