Saturday, 9 December 2023

எல்லாம் நீயே!

நானே பேசிக் கொள்கிறேனாம்
அவர்களுக்கு புரியவில்லை - நான்
உன்னோடு பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று...

பைத்தியமா என்கிறார்கள்
ஆம் 
நான் உன் மீது பைத்தியம் தான்...

ஏதோ பிதற்றுகிறேன் என்கிறார்கள்
உனக்கு மட்டும் எப்படி புரிகிறது நான் சொல்வது என்னவென்று...

தனிதிருகிறேன் என்கிறார்கள்
அவர்களுக்கு தெரியவில்லை - நீ
என்னோடு இருப்பது....

எல்லாம் நீயே என்று போனேன் 
எல்லாம் நீயே என்னுள் ..

- முத்து துரை 







No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...