அவர்களுக்கு புரியவில்லை - நான்
உன்னோடு பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று...
பைத்தியமா என்கிறார்கள்
ஆம்
நான் உன் மீது பைத்தியம் தான்...
ஏதோ பிதற்றுகிறேன் என்கிறார்கள்
உனக்கு மட்டும் எப்படி புரிகிறது நான் சொல்வது என்னவென்று...
தனிதிருகிறேன் என்கிறார்கள்
அவர்களுக்கு தெரியவில்லை - நீ
என்னோடு இருப்பது....
எல்லாம் நீயே என்று போனேன்
எல்லாம் நீயே என்னுள் ..
- முத்து துரை
No comments:
Post a Comment