Monday, 28 August 2023

உள்ளம் உன்னோடு

உயிர் என நானிருந்தேன்

உறவென நான் நிமிர்ந்தேன்

உள்ளம் எல்லாம் திமிரினேன்

உவகை எல்லாம் தேடினேன்

உருளும் ஒரு வார்த்தை - உன் 

உதடில் உதிராதா ?

உறைந்து நின்றேன்!

உதிரம் பிளந்து 

உன் உருவம் வரைந்தேன்...

உருகும் உன் மனம் என்றேன்

உருகுலைந்தேன் நான் 

உதிர்ந்த சருகாய் நின்றேன் - என் 

 உசுரையாவது தந்துவிடு இப்படிக்கு

உன்னுள் கரைந்த என் உயிர்...


- முத்து துரை 




No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...