Wednesday, 14 July 2021

நலமுடன் இரு!

 என் மார்பை கசிந்து

உன் பசியை போக்கினாய்

என் குருதியை உரிந்து உரிந்து

உன் ஆசையை வளர்த்தாய்

என் இளமையை துறந்தேன்

உன் இளமை மேம்பட

என் முதுமையை கூட கொடுத்தேன்

உன் இளமை நலம் பெற

என் கனவை மறந்தேன்

உன் வளர்ச்சியை கண்டு

என் தூக்கம் மறந்தேன் 

உன் துள்ளலை கண்டு

எல்லாம் இழந்தேன்

என் மகனே உனக்காக 

இன்று என் மனதையும் இழக்கிறேன்

முதியோர் இல்லம் செல்ல...


மனம் இல்லை உன்னை பிரிய

வேறு வழி இல்லை உன்னுடன் இருக்க...

செல்கிறேன் மகனே 

நலமுடன் இரு!


- முத்துதுரைசூர்யா

Wednesday, 2 June 2021

அவளுக்கென்று ஒரு மனம்

அவளுக்கென்று ஒரு மனம்

நிலவை போன்று தனிமையான மனம்

கரைவதும் வளர்வதும் தன்னுளே!


அவளுக்கென்று ஒரு மனம்

பகிர்ந்திட ஆயிரம் வாசகம் இருந்தும்

கேட்டிட காதுகள் இல்லா உள் குமுறும் மனம்!


அவளுக்கென்று ஒரு மனம்

அழகிய பூக்கள் போல்

அழகிய நினைவுகள் சுமந்த மனம்!


அவளுக்கென்று ஒரு மனம்

அன்பிற்காக ஏங்கும் மனம்...


- முத்து துரை சூர்யா

Saturday, 29 May 2021

அவளின் தனிமை

 அழகான இரவில்

அவள் மட்டும் தனிமையில்

கூட்டங்கள் பல கூடினாலும்

அவள் மட்டும் தனிமையில்

தனிமையில் கரைவதும்

பின் தனிமயிலே வளர்வதும்

அவளின் தனிமை என்றுமே அழகுதான்!

- முத்து துரை சூர்யா

Saturday, 22 May 2021

உவமை என்பதால் உருக்குகிறாயோ

 

நிலவென்பதால் கரைக்கிறாயோ
நிஜங்களில் மிளிர நினைத்தாய்
நினைவுகளில் மிளிர்கிறாய்

கடல் என்பதால் கரை மோதி மோதி
மன குமுறளை குறைகிறாயோ
மனமே இங்கு எதுவும் நிலையில்லை

மேகம் என்பதால் சுழல்கிறாயோ
இதயகூட்டில் எல்லாம் பொய்யே

- முத்து துரை சூர்யா


கனவு

கனவுகள் கண்களின் விருந்துகள்

கனவு களைய கூடாது சில வேளை

கனவு கலையாதா சில வேளை

நினைவுடன் கனவே மேல்

நிழலாய் இருந்தாலும்

நிஜமாக இருக்காதா ஏங்கும் மனம்

திரும்ப எப்போது கிடைக்கும் இந்த தருணம்

இன்ப கணவுகள்

வம்பு கனவுகள்

இம்சை கனவுகள்

பதட்ட கனவுகள்

லட்சிய கனவுகள்

பிரமாண்ட கனவுகள்

எத்துணை கனவுதான்

எத்துணை கற்பனை

எண்ணில் அடங்கா

என்னில் விளைந்த புதுமை


- முத்து துரை சூர்யா


அன்பு மகளே

 அன்னை பட்டம் தந்தாய்

அகிலமும் நீ ஆகினாய்...


என் இமைகள் இணைய மறந்தது

உன் இமைகளின் நடனத்தால்...


கைகள் கோலம் போடுகிறது

உன் கால்களின் நடனத்தால்


என்றும் நீ எனக்கு உயிரே!


- முத்து துரை சூர்யா


Sunday, 16 May 2021

போ நீ போ

 போய்விடு நீ 

போதும் வாட்டியது

போதும் கண்ணீர்

போதும் பயம்

அழகாய் தெரிந்ததும்

அதிசயமாய் நிகழ்த்தும்

பயத்தால் தூரம் போனது

பயம் பயம் 

மனம் பயத்தால் தைய்ரியம் இழந்தது

எங்களுக்கு கொடுத்த பாடம் 

என்றும் மாறுவது இல்லை

இத்துடன் போதும்

நீ போ! போய்விடு!


- முத்து துரை சூர்யா

Tuesday, 11 May 2021

இனிய செய்தி

 

இனிமை கலந்த மனம்
இயற்கையை நேசிக்கும் கண்கள்
இறைவா! இறைவா!
பூஜிக்கும் உதடுகள்
இனிய செய்தி இனிமை செய்தி
என்னவன் வருகை காத்திருந்து
எண்ணம்போல் கட்டி தழுவி சொல்லிட துடிக்குது மனது
அவனின் வருகை எதிர்பார்த்து
அவனிடம் தான் முதலில் சொல்ல வேண்டும்
அவனிடம் முத்தங்களை கோரவேண்டும்
அம்மாவின் அழைப்பு
அப்பாவின் கேள்விகள்
எல்லாத்துக்கும் மௌன பதில்
எங்கே என்னவன்
சொல்ல துடிக்குது இனிய சொற்கள்....
இனிய செய்தி
இனிப்புடன் கூறவா?
இல்லை
இதயத்துடன் பேசவா?
அவனின் ஆனந்தத்தை பார்க்க வேண்டும்
சீக்கிரம் வா கணவனே!

- முத்துதுரைசூர்யா


Wednesday, 3 March 2021

நினைவுகள்

 நித்தம் உன் நினைவுகள்

நித்திரையும் உன் நினைவுகள்
அர்த்தமில்லா இடத்திலும்
ஆதிக்கம் செலுத்தும் நினைவுகள்
உன் நினைவின் பின்னே
என் மனம் செல்கிறது
நிஜத்தில் நீ இல்லை
நினைவில் நீ மட்டும்
வருவாயா தென்றலே!
என்னை வருட வருவாயோ!

- முத்துதுரைசூர்யா

வெற்று நிலம்

நெல்லை நான் விதைதேன்

பயிராக நீ வந்தாய்

விருட்சம் நீ பெறுவாய் நம்பினேன்

கொக்கு போல் காத்திருந்தேன் 

நீ தலை நிமிரும் முன்னே 

சகதிக்கு இரை ஆகி போனாய்

நான் படைத்தது குற்றமா?


இங்கு
விதைத்து குற்றமா?


காலி வயிறு காய்க்கிறது பசியால்...

- முத்து துரை சூர்யா

Tuesday, 5 January 2021

யார் நான்

 

யார் நான் ?
மனிதனா இல்லை மிருகமா?
எதற்கு வந்தேன் இங்கே?
ஏன் இந்த வாழ்வு வாழ்கிறேன்?
யாருக்கு உழைக்கிறேன் 
ஏன் இப்படி உருகுகிறேன்?
ஆள பிறந்தேனா?
அடிமையாக பிறந்தேனா?
வாழ பிறந்தேனா?
வாழ்விக்க பிறந்தேனா?
பாவத்தின் பயனா?
புண்ணியத்தின் விருச்சமா?
அழிக்க வந்தேனா?
உருவாக்க வந்தேனா?
பண்பால் சிறந்தேனா?
சினதால் நிலைத்தேனா?
குணத்தை கற்பித்தேனா?
குற்றத்தை செய்தேனா?
அறிவில் உயர்ந்தேனா?
அறிவற்று கிடந்தேனா?
பகிர்வில் வாழ்வேனா?
பாசத்தை துறந்தேனா?
யார் நான் ?
யார் நான்?
கேள்விகளை சுமந்த
சாதாரண மனிதனா?

- முத்துதுரைசூர்யா


தோழியா? காதலியா?

 

பெண்ணே!
தோழியாய் உன்னை காணும்போது
கண்களில் கண்ணீர் வந்தது இல்லை
காதலியாய் பார்க்கும்போது
கண்ணில் வேதனை வருவது ஏனோ?

தோழியாய் நீ நின்றபோது
மனதில் உறுதி வந்தது
காதலியாய் ஆன பிறகு
காதலின் வலி தெரிகிறது...

தோழியாய் நீ இருந்தாய்
மனம் தூறல் போல் இருந்தது
காதலியாய் நீ மாறினாய்
காமத்தின் பிடியில் மனம் ஊசலாடுகிறது...

தோழி உன் விரல் கோர்க்கும்போது
கடுக்களவு கூட காமம் வந்ததில்லை
காதலி உன் விரல் தீண்டும் போது
ஏதோ உள்ளுகுள் ஒரு ஆனந்தம்...

சொல் பெண்ணே!
நீ எனக்கு தோழியா? காதலியா?

- முத்துதுரைசூர்யா


மழைத்துளி

 

மண்ணில் கருவுற்று
மேகத்தில் உருமாறி
மண்ணில் சேர்ந்தது
தாயிடம் பிறந்து
தந்தையிடம் தவம் செய்து
தாயிடமே வந்தது!

குளிர் சாரல்
வெப்பத்தின் தேடல்
இதமாக இதயம்
உருவாக நீ
உருமாற நான்
உள்வாங்க உன் துளிகள்!

- முத்துதுரைசூர்யா


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...