மேகங்களுக்கு பின்னால் இருக்கும் வானமாய்
உன் நினைவுக்கு பின்னால் இருக்கும்
காதல்!.
கதிரவனை காதலிக்கும்
நிலவாய் நீ நின்றாய்
நிலவை காதலிக்கும்
விண்மீன் கூட்டமாய் நான் வந்தேன்!.
பிரிவுடன் நீ நின்றாய்
புரிதலுடன் நான் வந்தேன்!.
சூறைக்காற்றில் நீ நின்றாய்
வருடும் தென்றலாய்
நான் வந்தேன்!.
ஒற்றை மலருக்காய்
ஓரம் நின்றாய்
சோலையுடன்
நான் வந்தேன்!.
வெறுப்புடன் நீ நின்றாய்
புன்னகையுடன் நான் வந்தேன்!.
- முத்து துரை
உன் நினைவுக்கு பின்னால் இருக்கும்
காதல்!.
கதிரவனை காதலிக்கும்
நிலவாய் நீ நின்றாய்
நிலவை காதலிக்கும்
விண்மீன் கூட்டமாய் நான் வந்தேன்!.
பிரிவுடன் நீ நின்றாய்
புரிதலுடன் நான் வந்தேன்!.
சூறைக்காற்றில் நீ நின்றாய்
வருடும் தென்றலாய்
நான் வந்தேன்!.
ஒற்றை மலருக்காய்
ஓரம் நின்றாய்
சோலையுடன்
நான் வந்தேன்!.
வெறுப்புடன் நீ நின்றாய்
புன்னகையுடன் நான் வந்தேன்!.
- முத்து துரை