Tuesday, 23 January 2018

முதுமை வந்துவிட்டது


வேட்க்கை தீர்ந்ததும் 
யாக்கை புரிந்ததும்
காக்கை அழகானது 

கொள்கை தளர்ந்தது 
கேளிக்கை மிகுந்தது
வாழ்க்கை தெரிந்தது 

இருந்தும் 

கயிறிட துடிக்குது 
கால் விரல்கள்...

மூக்கு கண்ணாடி தேடுது 
கை விரல்கள் 

அவனோ! அவளோ! 
கவனிப்பதில்லை - இருந்தும் 
புலம்பும் உதடுகள்...

கதைகள் பல கேட்க 
துடிக்குது செவிகள் 

கதை சொல்லத்தான் 
இல்லை உறவுகள் 

ஓடி ஓடி 
முதுமை வந்தது 
ஓய்வில் புரிகிறது 
தனிமையும்!!!

- மூ.முத்துச்செல்வி  

1 comment:

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...