Monday, 8 January 2018

கீரைக்காரி

கீரை வித்து எம்பொழப்போட
கூடையோட நா போக 
வந்தவக எல்லாம் 
பேரம் பேச 
கூடையோட காயுது 
என் வயிறும்....

கீரை கீரைனு!! 
நான் கூவ 
எசப்பாட்டு பாட காத்திருக்கு 
கருப்பு  மவராசா
கா கானு கத்திக்கிட்டு 

கொல்லையில் முருங்க வச்சேன் 
பக்குவமா பாதுகாத்தேன் 
நான் வளர்த்த மரம் 
பூவிடும் முன்னே 
காய்க்கு ஏலம் எடுக்க 
காத்திருக்கு ஒரு கூட்டம் 

வந்தவர் எல்லாம் பறிச்சி போக 
என் சோறு மட்டும் 
மிளகாய் தேடுது 
ஒத்த காசு நா கேட்டா 
உச்சியிலே அடிப்பாக 
ஒத்த உசுருக்கு காசு எதுக்கு 
சொல்லித்தான் சிரிப்பாக 
இப்படி போனா 
எம்பொழப்பு எப்படித்தான் போகுமோ!

-மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...