Thursday, 11 January 2018

நீயும் நானும்

முடி கோதிடும் விரல்கள் 
மடி சாய்ந்திடும் தலை 
கணவன் என்ற 
போர்வைக்குள் நான் 
மனைவி என்ற 
தலையணை நீ!
தென்றல் வீசிடும் 
நம் காதல்...
ஊசல் கடிகாரம் போல் 
ஊசலாடுகிறது மனம் 
வலக்கை, இடக்கை விதியும் 
விதிவிலக்கானது 
இரு கைகள் பின்னியதும்..
சில நேரம் 
போரிட நான் 
வாதத்திற்கு நீ 
வாய்தா ஏற்றது வாதம் 
வசந்தம் வந்தது 
வாசலில் - இணைந்து 
வருடுவோம்...
வருடம் ஓடினாலும் 
வயதுகள் ஓடினாலும் 
வழித்துணையாக நான் 
மாறாது நம் காதல்....

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...