Thursday, 11 January 2018

ஏன் பிறந்தேன்??


நானிலம் போற்ற 
நான் பிறந்தேனாம்!
நான் இருக்கும் 
நிலம்கூட போற்றவில்லை...

பார் புகழ 
பிறந்தேனாம்!
பாராட்டக்கூட ஆள் இல்லை...

நான் இருக்கும் இடம்
பிறக்கும் போது சோலை 
வளரும் போது பாலை
என் வாழ்வு
என்றும் பாலை...

பூமிக்கு பாரமாக 
நான் பிறந்தேனா??
இல்லை 
வையகம் போற்ற 
நான் பிறந்தேனா??

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...