Saturday, 13 January 2018

பொங்கலோ பொங்கல்


மஞ்சள் குழை
மயக்கத்தில் 
மந்திர புன்னகை 
மண்பானை பொங்கல் 
பொங்குதம்மா!!!

மார்கழி பிரசவத்தில்
தைப் பிறந்ததம்மா
தையல் நாயகி
அருள் கிடைத்தம்மா!!!

ஆடிப்பட்டம் தேடி
விதைத்த விதை
பக்குவமாய் 
அறுவடை ஆனதம்மா !!

உழவன் வியர்வை கண்டு
கொதித்த சூரியனும்
அவன் சிரிப்பில்
பிரகாசிக்குமம்மா!!!

கூடி மகிழ்ந்து
மதம், இனம் மறந்து
பொங்கட்டும் பொங்கலம்மா!!!

- மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...