Monday, 8 January 2018

தோழியுடன் நான்


தோழியே!
உனக்காக கண்ணீர் சிந்த 
நான் இருக்கிறேன்
சுமைகளை என்னோடு இறக்கிவிடு 
நிலம் தாங்கும் முன் 
உன் கண்ணீர் துளிகளை 
தாங்கும் என் கைகள் 

உன் 
மகிழ்வில் நான் மகிழ்வேன் 
மகிழ்வதை இரட்டிப்பாக்கு 
சிரிக்கும் உதடுகளுடன் 
நீளட்டும் நம்  பயணம் 

மழலை மொழி 
மகிழ்வதை போல் 
உன் மலர் போன்ற இன்பம் 
மலர்ந்து விரியட்டும் 
மணம் வீசட்டும்

தோழியே! மறவாதே !!
உன் 
துன்பத்தின் முன் நான் நிற்பேன்! 
இன்பத்தின் பின் நான் நிற்பேன்! 

-மூ.முத்துச்செல்வி





No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...