Monday, 8 January 2018

கன்னித்தமிழும் கத்துக்குட்டியும்


கன்னித்தமிழ் நீ 
கத்துக்குட்டி நான் 
லெமூரியா மலர் நீ 
தும்பி நான் 
வல்லினம் நீ
மெல்லினம் நான் 
இடையினமாய் நம் காதல்!!
வலி மிகும், மிகா இடம் நீ
ஒற்று பிழை நான் 
உன்னை நீங்கினில்
சுற்றும் பிழை தான் 
இலக்கணம் நீ 
இலக்கியம் நான் 
இலக்கணம் இல்லையேல் 
இலக்கியம் ஏது??
அணிகலன் மாலை நீ
அளபெடை நான்
உயிர் நீ 
மெய் நான் 
உயிர் இல்லையேல் 
மெய் சடலமே

மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...