Tuesday, 23 January 2018

முதுமை வந்துவிட்டது


வேட்க்கை தீர்ந்ததும் 
யாக்கை புரிந்ததும்
காக்கை அழகானது 

கொள்கை தளர்ந்தது 
கேளிக்கை மிகுந்தது
வாழ்க்கை தெரிந்தது 

இருந்தும் 

கயிறிட துடிக்குது 
கால் விரல்கள்...

மூக்கு கண்ணாடி தேடுது 
கை விரல்கள் 

அவனோ! அவளோ! 
கவனிப்பதில்லை - இருந்தும் 
புலம்பும் உதடுகள்...

கதைகள் பல கேட்க 
துடிக்குது செவிகள் 

கதை சொல்லத்தான் 
இல்லை உறவுகள் 

ஓடி ஓடி 
முதுமை வந்தது 
ஓய்வில் புரிகிறது 
தனிமையும்!!!

- மூ.முத்துச்செல்வி  

1 comment:

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...