Wednesday, 14 February 2018

அழகு மௌனங்கள்



அசைபோடும் ஞாபகம் 
அதில் அசைந்தாடும் 
மௌனங்கள்! 

அழும் போது 
உடன் வரும் 
மௌனங்கள்! 

தலைவன் பிரிவில் 
தலைவி சிந்திடும் 
மௌனங்கள்! 

தலைவனைக் கண்டதும் 
தலைவி நாணத்தில் வீசும் 
மௌனங்கள்! 

காதலை சொல்லும் 
காதலர்கள் உதிர்க்கும் 
மௌனங்கள்! 

ஏக்கத்திலும், பாசத்திலும் 
கோவத்திலும், நாணத்திலும் 
ஊடலிலும், பிரிவிலும் 
சிரிப்பிலும், சோகத்திலும் 
உடன் பயணிக்கும் 
மௌனமும் ஓர் அழகுதான்! 

- மூ.முத்துச்செல்வி

1 comment:

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...