Tuesday, 27 February 2018

எங்கே மனிதம்


உன் இனவெறிக்கு
பழி நாங்கள்
உன் போட்டிக்கு
எங்கள் உயிர் பந்தயங்களா?
பள்ளி சுமை சுமந்த 
முதுகுகள் 
வெடிகுண்டுகளின்
துளைகளை சுமக்கிறதே!

இறைவா!
குழந்தைகளைக் கொல்லும்
இம்மனிதர்களை
உன்னுடன் எடுத்துக்கொள்
எங்கள் கண்ணீரை
துடைக்க கரம் நீட்டு!

வளங்களை அடைய
வளரும் தலைமுறை
வாழ்வை சிதைப்பது
சரியோ!

மிருகங்கள் இரக்கம்கூட
இல்லா மனிதனிடம்
மனிதத்தை தேடுவது
பிழையோ!

- மூ.முத்துச்செல்வி




No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...