Saturday, 17 February 2018

நிறுத்துங்கள்



கானம் பாடி மகிழும் 
குயில்களே! உங்கள் 
பாடலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி அழுகிறான்... 

வருடும் காற்றே! 
தென்றலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீரிலாவது 
விதை முளைக்கட்டும்... 

சுடும் சூரியனே! 
சுடுவதை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீர் 
சேமிக்கப்படடும்... 

எமை படைத்த இறையே! 
உம் படைப்பை நிறுத்துங்கள் 
உணவளிக்க விவசாயி 
இங்கில்லை... 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...