Saturday, 17 February 2018

நிறுத்துங்கள்



கானம் பாடி மகிழும் 
குயில்களே! உங்கள் 
பாடலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி அழுகிறான்... 

வருடும் காற்றே! 
தென்றலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீரிலாவது 
விதை முளைக்கட்டும்... 

சுடும் சூரியனே! 
சுடுவதை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீர் 
சேமிக்கப்படடும்... 

எமை படைத்த இறையே! 
உம் படைப்பை நிறுத்துங்கள் 
உணவளிக்க விவசாயி 
இங்கில்லை... 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...