Wednesday, 21 February 2018

எங்கே தேடுவது மனிதத்தை இங்கே!


வியர்வை துளியில் இரத்தம்
உறிய துடிக்கும்
கூட்டம்....

போராட்டம் பல செய்தும்
பார்க்காத நாட்காட்டி

தோலுரித்த எலும்புகளாய்
அழையவிட துடிக்கும்
பேராசை பணங்கள்

சுவாசிக்கும் காற்றில் கூட
இல்லை
ஒரு துளி அமிர்தம்.

உப்பு காற்றில்
சிலிர்க்கும் தோலுக்கு
கோடியில் விஷம் ஏறிய
ஆலைகள்.

எங்கே தேடுவது
மனிதத்தை இங்கே!

- மூ.முத்துச்செல்வி



No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...