Wednesday, 27 September 2017

சொல்லாத முதல் காதல்



தேரோட்ட வீதியில் 
தொலைந்த 
திரு திரு கண்கள் - அவளிடம் 
தொலைந்த என் காதல்!! 

விடியல் பனியில் 
மங்கிய 
சூரிய விருச்சம் 
மங்கிய என் காதல் !! 

இடை மருங்கி 
நடை தளர்ந்த 
முதுமை என் காதல்!!! 

சூரிய நிழலில் 
மறைந்த 
சந்திரன் 
இருள் நீண்ட என் காதல்!! 

செங்கதிர் தேக கூந்தல் 
மணத்தில் - கூம்பிய 
இதழ் மலர்ந்த 
செந்தாமரை என் காதல்!! 

நந்தவனத் தோட்டத்தில் 
துள்ளி திரியா 
கருகிய பூக்கள் 
வாடிய என் காதல் !! 

துள்ளி திரியும் மீன்கள் 
சுவாசிக்கும் நீரின்றி 
தவிப்பது என் காதல்!! 

விண்ணை காண சென்ற 
விட்டில் மண்ணில் முட்டிய 
ஏமாந்த என் காதல் !! 

வனிதையிடம் 
சொல்லாத முதல் காதல் 
வருடங்கள் கடந்தாலும் 
என் மனதில் மட்டும் உள்ள 
என் ரகசிய காதல் 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...