Wednesday, 27 September 2017

அவள் தந்த தனிமை



மழைத்துளியில் 
கரைந்திட்ட கண்ணீர்த்துளி 
அவள் தந்த சோகம்!!!..... 

மரகத மின்னல்கூட 
புலப்படவில்லை 
அவள் தந்த இருளால்!!!.... 

தொண்டையில் சிக்கிய முள்ளாய் 
உள்ளும் செல்லாமல் 
வெளியும் வராமல் 
அவள் தந்த தனிமை!!!.... 

பாய் மர ஓடம் 
காற்றின் அசைவை வட்டமிடுவதை போல் 
என் மனம் வட்டமிடும் 
அவள் தந்த நினைவில்!!!..... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...