Wednesday, 27 September 2017

முற்றுப்பெறா முதல் காதல்



என் காதல் வார்த்தையாய் 
அவள் செவியில் விழும் முன் 
கண்களின் ஓரம் அவள் சிந்திய ஈரம் 
வாடிய முல்லைப் போல் நின்றாள்..... 
புரியவில்லை பதில் ஏதும் கேட்காமல் 
பாதியில் வந்துவிட்டேன் வீடு தேடி 
மரணத்தின் வலி 
மறைத்தேன்..... 
சோகங்களின் நாட்டியம் சூழ 
அவளைப் பார்க்க மனமில்லை..... 
அவள் மனம் புரிந்ததால் 
விலகிவிட்டேன் விட்டுவிட்டேன்... 
அவளிடம் விட்டு வந்த 
என் பாதி காதலுடன்..... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...