Thursday, 7 September 2017

காதல் கடிதம்


காதல் கடிதம்

காதலை நேசிக்கிறேன் ! 
காக்கை, குருவியை நேசிப்பதால்... 
காதலில் தத்தளிக்கிறேன் ! 
கண்ணதாசன், கல்கி வரிகளில் தத்தளிப்பதால்... 
காதலில் கரைகிறேன் ! 
இயற்க்கை அழகில் கரைந்ததால்.... 
காதலை வர்ணிக்கிறேன் ! 
மலைகளின் செறிவை வர்ணிப்பதால்... 
காதலை தெரிந்தேன் ! 
அனைத்தும் அழகாய் தெரிந்ததால்... 
காதலை சுமக்கிறேன் ! 
அழகிய நினைவுகளை சுமப்பதால்... 
காதலில் அழுகிறேன் ! 
வேதனைகள் போர்த்தி அழுவதால்.... 
காதலை சபிக்கிறேன் ! 
என் கண்ணீர் என்னை சபிப்பதால்... 
இறுதியில் !!! 
எல்லாவற்றையும் காதலிக்கிறேன் ! 
உன்னை காதலிப்பதால்... 

-மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...