Wednesday, 27 September 2017

வரம் தரும் பொழுது


நாத குழல் துவாரங்களில் 
வீசிடும் மெல்லிய காற்றின் இசை 
கூவும் குயிலின் இன்னிசை 
அதை கேட்டு ஆடுதம்மா 
மயிலின் தோகை.. 
மேகங்களுக்கு இடையில் 
வேடிக்கை பார்க்குது - என் 
காலை கதிரவன்.... 
சப்தங்களின் ஒலியில் 
துயில் கொண்டு கூவுதம்மா 
கொண்டைக் கோழியும்.... 
அணிலின் நாதமும் பின்னணியில் 
அலம்பிட மயங்கிய மரக்கிளை 
இசையுடன் அசைந்திட 
சின்ன குருவிகள் 
காதல் 
பொழிந்திட 
இனிய நாடகங்களுடன் 
பொழுது விடிகிறது..... 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...