Saturday, 21 April 2018

காதலே வந்துவிடு!!!

காதலே!
கடவுச்சொல்லாய் 
மாறினாய் 
என் இதயக்கூட்டில் 
களவுபோனாய்!

கூடு உடைந்த 
பட்டாம்பூச்சியாய் திரிகிறேன் 
உன்னைத் தேடி 

நகக்கண்ணில் வேதனை 
மனக்கண்ணில் உன் பிம்பம் 
பிரிந்தது போதும் 

மூச்சிக்காற்றை மொத்தம் 
தொலைத்தேன் 
நச்சுப்புகையில் 
வாழ்கிறேன்.

காதலே 
வந்துவிடு 
இல்லை என்னை 
கொன்றுவிடு!

- மூ.முத்துச்செல்வி 

1 comment:

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...