Sunday, 6 May 2018

நீயும் நானும்

அவசர யுகங்கள் நடுவிலே
படப்படப்பின் இடையிலே
வளர்ந்த காதலே!
ஓடும் வாழ்க்கை
ஓய்ந்த கால்கள்
ஓயவில்லை காதல்
ஏமாற்றம் நிறைந்த வாழ்வில்
ஏமாற துடிக்கிறது மனம் 
காதலில் மட்டும்
விசிறி இருந்தும்
வீச மனமில்லை 
காதலின் விசிறியாய் ஆனபின்
காதலே!
காதலுக்கு
தத்துப்பிள்ளை
நீயும் நானும்!

-மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...