Wednesday, 23 May 2018

மாற்றம் எதிர் நோக்கி

தலைமை சரி இல்லா தேசத்தில்
தலையெழுத்தை மாற்ற துடித்தோம்

உழுதுண்ட தேசத்தில்
உயிர்ப்பலி கேட்கும்
மிருகங்கள் கண்டோம்.

உப்பு காற்றில்
உண்மை பாசம் கொண்டோம்
குருதி குடிக்கும்
கூட்டம் கண்டோம்.

புற்றுநோய் காற்றை எதிர்த்தோம்
புற்றுப்போல் மிதித்தது
அடிப்பணிந்த தலைமை கூட்டம்.

அடுக்கிய ஆத்திரம்
ஆகாயமாய் விரிந்திடும்
ஆணவ அரசே கேட்டுக்கொள்!

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...