Tuesday, 5 June 2018

மாற்றம் ஒன்றே மாறாதது


மாற்றம்!
அனைத்தும் மாறும்!
அதிகாரம் மாறும்
ஆண்டவன் அடிமையாவான்
அடிமை ஆண்டவனாவான்
போலிகள் உண்மையாகும்
உண்மை போலியாகும்
வாழ்க்கை நரகமாகும்
நரகமே வாழ்வாகும்
பேதை வீரனாவான்
வீரன் கோழையாவன்
காதல் மாறும்
காற்றும் மாறும்
கடல் அலை நிறம் மாறும்
கழிவுகள் ஆறாய் மாறும்
ஆறுகள் ஓடையாய் மாறும்
பணம் வந்ததும்
குணம் மாறும்
குணம் வந்ததும்
பணம் கை மாறும்
அகிலம் எல்லாம் மாறும்
குத்தும் ஓட்டும் காசாய் மாறும்
மறதியில் மனிதனும் மாறுவான்
ஆம்!
மாற்றம் ஒன்றே மாறாதது!
சிந்திக்கும் சமூகமாய்
நாம் மாறும்
நாளும் எங்கே?

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...