Wednesday, 4 July 2018

பாவி நான்

பகலவன் புகழ்ந்தான்
புகலவன் நான் கொண்டேன்
படைத்தவன் பித்தானான்
பாமரன் நான் வித்தானேன்
ஓதியவர் எல்லாம் ஓய்ந்திட 
ஓடமாய் நான் நின்றேன் 
பூக்கள் எல்லாம் காய்ந்திட 
புழுக்களுக்கு உரமானேன் 
வண்ண மேனியால் 
என்னை கேக்கிறாள் 
வாடி நான் நின்றேன் 
அழுக்குக்களின் புகலிடம்  
அனைத்திற்கும் முதல் இடம் நான் 
காடு மேடு எல்லாம் 
கஞ்சியுடன் நான் உழைத்தேன் 
ஆதரவுடன் நான் வருட 
பாவி அவள் என்னை நம்பினாள் 
என் செய்ய 
என் விவசாயமே!

-மூ.முத்துச்செல்வி  

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...