பகலவன் புகழ்ந்தான்
புகலவன் நான் கொண்டேன்
படைத்தவன் பித்தானான்
பாமரன் நான் வித்தானேன்
ஓதியவர் எல்லாம் ஓய்ந்திட
ஓடமாய் நான் நின்றேன்
பூக்கள் எல்லாம் காய்ந்திட
புழுக்களுக்கு உரமானேன்
வண்ண மேனியால்
என்னை கேக்கிறாள்
வாடி நான் நின்றேன்
அழுக்குக்களின் புகலிடம்
அனைத்திற்கும் முதல் இடம் நான்
காடு மேடு எல்லாம்
கஞ்சியுடன் நான் உழைத்தேன்
ஆதரவுடன் நான் வருட
பாவி அவள் என்னை நம்பினாள்
என் செய்ய
என் விவசாயமே!
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment