Monday, 16 July 2018

உன் நினைவு


மரிக்கின்ற வேளை 
உன் நினைவை 
மறைக்க வேண்டும் 

உதிர்கின்ற வேளை 
உன் நிழலில் 
உதிரம் சிந்த வேண்டும் 

ஏக்கம் கொள்ளும் வேளை 
உன் எண்ணங்களை 
ஏந்திட வேண்டும் 

யாமம் வருடும் வேளை 
உன் நினைவுகளுடன் 
யாகம் சேர்ந்திட வேண்டும் 

காதல் வந்திடும் வேளை 
உன் நினைவுடன் 
காலம் போக்கிட வேண்டும்

தனிமை இருக்கும் வேளை 
உன் கனவுகளுடன் 
 துயில் கொள்ள வேண்டும்

நீரற்ற மீன்கள் போல் 
உன் நினைவில்
நாளும் துடித்திட வேண்டும் 

-மூ.முத்துச்செல்வி  

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...