Monday, 23 July 2018

யாரை நம்ப!?

தோழன் என்று 
நினைத்தேன் 
தோளில் வலிமை 
இழந்தேன் 
காதலன் என்று 
நினைத்தேன
கேளிக்கைச் 
செய்தான் 
முதியவன் என்று 
நினைத்தேன் 
முந்தானை 
கேட்கிறான் 
தந்தை என்று 
நினைத்தேன் 
தன்மானம்
இழந்தேன் 
கயவன் என்று நினைத்தால் 
நான் வாழும் பூமியே 
நரகம் என்றானது  
பெண் என்றேன் 
வேடிக்கைச் செய்தான்  
யாரை தான் நம்புவது 
பெண் கடவுள்களை 
காணும் தேசத்தில் 
வேலி என்று கிடைத்தான் 
நம்பினேன் 
ஆனால் 
துரோகியே அவன் தான் 
யாரை நம்ப!?.

- மூ.முத்துச்செல்வி 


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...