Monday, 16 July 2018

இயற்கையன்னை


வீறுகொண்ட மாமேனி
செந்நிற மேனியில்
வீற்றிருக்க
வீர மகள்
நாளும் போற்ற
வையம் போற்ற
வாழ்த்திடுமே உன் புகழை 

நானிலம் நீ 
நீரும் நீ 
வானும் நீ 
கண்ணீர் துளியும் நீயே!
கதிரவன் காதலியே 
நிலவொளி தலைவியே 
நீலநிற மேனியாலே!
பண்ணும் நீ 
என் 
பாட்டும் நீயே!

பாடும் கானம் 
எல்லாம் 
உன்  தாள் பணிய 
அன்னை உருவே 
எங்கள் உயிரே 
மன்னிப்பாயாக!

- மூ.முத்துச்செல்வி 


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...