Sunday, 1 April 2018

இயற்கையும் கல்வியும்

பூஞ்சோலை தோட்டத்து
ஊஞ்சலில் உலா வரும்
நெல் மணிகளுக்கிடையே
ஆரம்பமாகிறது தொடக்கக்கல்வி

ஏர்பூட்டும் கைகள்
ஆகாசத் தோழன்
அழகுற பின்னிய நட்பு
அறிவூட்டும் அதிசயக்கல்வி

ஓதங்களில் அசையும்
பாய்மர ஓடங்களில்
பல்லக்கில் செல்லும்
பசுமைக்கல்வி

இயற்கை அன்னை
இயற்றிய அழகிய நூல்
இயற்கையோடு இனைந்த
இனியக்கல்வி

தேடி தேடி திரியும் கால்கள்
சேற்றில் படரும் கைகள்
நீரோடை வண்ணத்தில்
முழுமையடையும் கல்வி

-

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...