Sunday, 1 April 2018

பணி நிறைவு

ஓடிய வலிகள் போதும்
ஒய்வெடுத்துக் கொள்!
கதை சொல்லி வளர்த்தாய்
இனி வரும் காலம்
எம் மகளோ! மகனோ!
கதை சொல்லும் குழந்தை
நீ தான்!
உன் புகழ் பாடும்
இம்மண்ணில்
உன் குழந்தைகள் நாங்கள்
வாழ்த்த வரவில்லை!
வாழ்த்து பெற வந்தோம்!

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...