Wednesday, 21 March 2018

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்
என்றே உள்ளம் கொண்டு
நல்லாள் வழி
நடந்திடு மானிடனே!
நமை விதையாய் தூவிய
அவன் கைகள்
மழையாய்ப் பொழிந்து
நமை காத்திடுமே!
பயிராய் நாம் முளைத்து
மரமாய் நாம் வளர
ஒளியாய் அவன் நிற்பான்
அண்டங்கள் பயிலும்
அறிவை வளர்ப்போம்!
நெஞ்சங்கள் இணையும்
நல் உறவு வளர்ப்போம்!
தேசங்கள் தாண்டியும்
பாசங்கள் வளர்ப்போம்!

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...