Sunday, 4 March 2018

அப்பா


தாயின் அன்பில் 

பெருமை கொண்ட 
வரிகள் - ஏன் 
உன் அன்பை 
போற்றவில்லை?. 

கருவில் சுமந்தவளைப் 
பாராட்டிய வரிகள் - ஏன் 
உன் வாழ்நாள் சுமையை 
எண்ணவில்லை?. 

அன்னையின் தியாகத்தைப் பாட 
ஆயிரம் வரி தேடியக் கவிதைகள்- ஏன் 
உன்னை பாட ஒரு வரியும் 
தேடவில்லை?.... 

அவள் தந்த உடல் 
நீ தந்த உயிர் - ஏன் 
உன்னை புகழ மறந்தது? 

ஒருவேளை 
அன்னை போல 
எளிதில் ஏமாறுவாய் என்றால் 
என் கவிதைகளும் 
உன் புகழை பாடி இருக்குமோ! 

-மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...