தாயின் அன்பில்
பெருமை கொண்ட
வரிகள் - ஏன்
உன் அன்பை
போற்றவில்லை?.
கருவில் சுமந்தவளைப்
பாராட்டிய வரிகள் - ஏன்
உன் வாழ்நாள் சுமையை
எண்ணவில்லை?.
அன்னையின் தியாகத்தைப் பாட
ஆயிரம் வரி தேடியக் கவிதைகள்- ஏன்
உன்னை பாட ஒரு வரியும்
தேடவில்லை?....
அவள் தந்த உடல்
நீ தந்த உயிர் - ஏன்
உன்னை புகழ மறந்தது?
ஒருவேளை
அன்னை போல
எளிதில் ஏமாறுவாய் என்றால்
என் கவிதைகளும்
உன் புகழை பாடி இருக்குமோ!
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment