Monday, 5 March 2018

உயிர்களின் அன்னையே!

பூமி தாயே! 
நான் உதிர்த்த முத்தங்கள் 
உன் கன்னத்தை வருடியது! 
உன் முத்தங்கள் 
என் மகிழ்ச்சியை வருடுவது 
எப்போது? 

உன் கைகளில் 
முளைத்த கிளைகள் 
உயிர் மூச்சாய் 
என்னுள் வீச - தாயே! 
என் உயிர் நீ என்று 
உணர்ந்துகொண்டேன்! 

என் வலசை போகும் பாதங்கள் 
உன் அதிசய தேகங்களைக் 
காயம் செய்திடில் 
மன்னித்து புன்னகை புரிந்துவிடு! 

உன் களை 
நான் அகற்சி 
உன் புல் மடி 
தலை வைத்து தூங்கிடும் 
சுகம் மட்டும் போதும்! 

உயிர்களின் அன்னையே! 
என் வாழ்வில் 
காற்புள்ளியும் நீயே! 
முற்றுப்புள்ளியும் நீயே! 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...