Monday, 5 March 2018

எழுவாய் பெண்ணே!


எழுவாய் பெண்ணே!
புதியவை மலர 
பழையவை பாதுகாக்க 
எழுவாய் பெண்ணே
கைவிலங்கு உடைத்து 
கைமணம் பரப்பிட 
உன் கைகளின் வலிமையை 
உலகறியட்டும்!
வா பெண்ணே!
துணிவுகளின் அகராதி நீ!
துயரங்களின் ஆறுதல் நீ!
உன் கண்ணீரின் ரணம்
சிந்தியதால் 
பூமி தாயின் தேகம் சுடுகிறது. 
வழியும் கண்ணீரை 
துடைத்திடு!
வீறுகொண்டு தொடர்ந்திடு!
சாதனைகளின் வடிவங்கள் 
சுமந்தவள் நீ!
அன்னை நீ!
தோழி நீ!
வலிமை நீ!
அனைத்தும் நீயே!
உன் பாதச்சுவடுகள் 
உலகில் பரவிட 
உன் புகழ் 
உலகினர் செவிகளில் 
புத்துணர்வு படைத்திட 
வருவாய் பெண்ணே!

- மூ.முத்துச்செல்வி 


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...