Monday, 5 March 2018

சாதனைப் பெண்ணே


தமிழுக்கு ஆத்திசூடி 
தந்திட்ட ஔவை!
வேல் ஏந்திய 
வீர மங்கை 
வேலு நாச்சியார்!
வெள்ளையர்களை 
வெளியேற்றிய போர் மங்கை 
ஜான்சி ராணி!
தொழு நோயும் 
தொழுதிட்ட 
அன்னை தெரசா! 
வீண்மீன்களும் வியந்த 
கல்பனா சாவ்லா!
குரல் வலையில் 
கட்டிய சுப்புலட்சுமி! 
இவர்கள் 
பிறந்த மண்ணில் தான் 
சாதனைப் பெண்ணே 
நாமும் பிறந்தோம்.
இவர்களின் தலைமுறை நாம்
பாராட்டும் பாரதம்
நம் புகழ் பாடி...
பூமியும் வரையும்
நம் பாதசுவடை...
படைத்திடுவோம் புது வரலாறு....

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...