Sunday, 24 May 2020

உன் முகத்துடன் என் முகம் புதைத்தேன்
மூச்சி காற்று இடம்பெயர்ந்து
என்னுள் பால் மனம் வீசியது
இமை ரெண்டும் உரசையில்
என் விழி உன்னுள் மாறியது
கன்னத்தில் நீ மோதினாய்
பனியென மாறியது மனம்
கைகளை கோர்த்தாய்
காதலை உணர்ந்தேன்
நீயோ!
மழலை மொழியில்
தாலாட்டு பாடு என்றாய்...

- முத்து துரை சூர்யா

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...