Friday, 22 December 2017

கருமை


வெண்மை தான்
உயர்வு என்றால்
ஏன் கருமையைப்
படைத்தாய் இறைவா!!

விழிதிரை கானும் காட்சி
கருப்பின் சிதலற்களே!
வெண்மை தாங்குவதால்
தெரியவில்லையோ
கருப்பின் அழகு..

கருமேக அழகில்
கசிந்த கண்ணீரின்
மழைத்துளி நிறமில்லை
என்பதால் கருமை
கனியவில்லையோ..

நிலவொளி போற்றும் வரிகளுக்கு
நிஜவொளி போற்ற மறந்தது ஏனோ??

நிழலின் நிறத்தில் இருப்பதனால்
நிஜங்களின் மனம் புரியவில்லையோ??

சிவப்பு குருதி் கண்ட
இதயங்கள் என்பதால்
சிவப்பைத் தேடுகிறதோ??

முடிகளில் கருமைத் தேடும்
கண்கள் முகங்களின்
கருமை வெறுப்பதேனோ!!

வர்ணிக்கபட வில்லை
என்றாலும்
வெறுக்கபடாமல் இருந்தால்
போதும்...

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...